×

அரியலூர் மாவட்டத்தில் நாளை முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்ட புதிய பயனாளிகள் பதிவு முகாம்

அரியலூர், டிச.1: அரியலூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் புதிய பயனாளிகளைச் சேர்ப்பதற்கான சிறப்பு காப்பீட்டு திட்ட பதிவு முகாம் நாளை டிசம்பர் 2ம் தேதி நடைபெறுகிறது. இது குறித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது; தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் புதிய பயனாளிகளைச் சேர்ப்பதற்கான சிறப்பு காப்பீட்டு திட்ட பதிவு முகாம் அரியலூர் மாவட்டத்தில் நாளை டிசம்பர் 2ம் தேதி அரியலூர் நகராட்சி அலுவலகம் மற்றும் செந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது.

இம்முகாமில் பதிவு செய்வதற்கு குடும்ப அட்டை (ரேசன் கார்டு), ஆதார் அட்டை மற்றும் அவற்றின் நகல்களை கொண்டு வரவேண்டும். இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களிடம் உள்ள ஆவணங்களுடன் மனுக்கள் அளித்து பயன்பெற வேண்டும். இவ்வாறு கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

The post அரியலூர் மாவட்டத்தில் நாளை முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்ட புதிய பயனாளிகள் பதிவு முகாம் appeared first on Dinakaran.

Tags : Ariyalur District ,Ariyalur ,Comprehensive Insurance Scheme New Beneficiaries Registration Camp ,Dinakaran ,
× RELATED அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் 6 டன் ரேஷன் அரிசி பறிமுதல்..!!